கோவை: தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்ச்சி முகாமில் பாகன்களால் தாக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானை நலமுடன் இருப்பது தெரியவந்துள்ளது.
கோவை: தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்ச்சி முகாமில் பாகன்களால் தாக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானை நலமுடன் இருப்பது தெரியவந்துள்ளது.
தேக்கம்பட்டியில் உள்ள யானை புத்துணர்ச்சி முகாமுக்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெண் யானை (ஜெயமால்யாதா, வயது 18) பாகன்களால் தாக்கப்பட்டதாக செய்தி கிடைத்ததும், அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து வினில்குமார் (வயது 46) சிவபிரசாத் (வயது 32) ஆகிய இரண்டு இரண்டு பாகன்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தமிழ்நாடு வளர்ப்பு யானை விதிகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்போது ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த யானையை நிர்வகிப்பதற்கான பொருத்தமான வழிமுறைகள் அறநிலையத் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சேந்தூர் கோயில் பெண் யானையுடன் வந்த உதவியாளர் சுப்பிரமணியம் என்பவர் இப்போது யானையைக் கண்காணித்து வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளாக தேக்கம்பட்டி முகாமில் இந்த யானையைப் பார்த்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்குள்ளான யானையை ஆய்வு செய்ய கோயம்புத்தூர் வன கால்நடை அலுவலர் வருகை தந்தார். அவர் முகாமுக்கு சென்று யானையை முழுமையாகப் பரிசோதித்ததில் யானைக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.