பொள்ளாச்சி வங்கியில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற தனியார் நிறுவன ஊழியர்: போலீஸ் விசாரணை!

கோவை: பொள்ளாச்சியில் உள்ள தனியார் வங்கியில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற தனியார் நிறுவன ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள தனியார் வங்கியில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற தனியார் நிறுவன ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் நேற்று முன்தினம் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ரூபாய் 2 லட்சம் செலுத்துவதற்காக வந்திருந்தார். அவர் வங்கி ஊழியரிடம் இரண்டு லட்சம் ரூபாயை செலுத்துவதற்காக கொடுத்தார். அப்போது சந்தேகமடைந்த வங்கி ஊழியர் அந்த ரூபாய் நோட்டுகளை பரிசோதித்துப் பார்த்ததில் அதில் 14 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக இதுகுறித்து வங்கி மேலாளர் செல்வக்குமார் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் 14 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அதன்பேரில் தனியார் நிறுவன ஊழியரான ஆவலப்பம்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...