தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில், யானையை கொடுமையாக தாக்கும் பாகன் மீது நடவடிக்கை..!
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. அதில், தமிழகத்தில் உள்ள கோவில் மற்றும் மடங்களில் இருந்து 28 யானைகள் புத்துணர்வு முகாமில் சிறப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெய்மால்யதாவை அதன் பாகன் கடுமையாக தாக்கும் வீடியோபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், அந்த யானையை ஒரு தடியை கொண்டு முதலில் ஒரு பாகன் கடுமையாக காலில் தாக்குகிறார், பின்னர் மற்றொரு பாகன்என்று, அந்த யானையை மாறி மாறி இருவரும் கடுமையாக தாக்கும், நெஞ்சை உலுக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், யானையை தாக்கிய பாகன் மற்றும் உதவி பாகனை பணியிடை நீக்கம் செய்ய இந்து அறநிலைத் துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், நேற்று மாலை கால் சங்கிலியை கழட்டிய யானை, பாகனின்காலை மிதித்ததாக, கூறப்படுகிறது.
சங்கிலியை கழட்டிய அந்த யானை அங்கிருந்து வெளியேறி இருந்தால், மற்றவர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்ற காரணத்தினால் யானையை எச்சரிக்கும், வகையில் தாக்கியதாக அவர்கள் இருவரும் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தாக கூறப்படுகிறது.
யானைகளை கொடுமைப்படுத்துதல் குற்றம் என்ற சட்டப் பிரிவின் கீழ் வனத்துறையினர், இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெய்மால்யதாவை அதன் பாகன் கடுமையாக தாக்கும் வீடியோபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், அந்த யானையை ஒரு தடியை கொண்டு முதலில் ஒரு பாகன் கடுமையாக காலில் தாக்குகிறார், பின்னர் மற்றொரு பாகன்என்று, அந்த யானையை மாறி மாறி இருவரும் கடுமையாக தாக்கும், நெஞ்சை உலுக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், யானையை தாக்கிய பாகன் மற்றும் உதவி பாகனை பணியிடை நீக்கம் செய்ய இந்து அறநிலைத் துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், நேற்று மாலை கால் சங்கிலியை கழட்டிய யானை, பாகனின்காலை மிதித்ததாக, கூறப்படுகிறது.
சங்கிலியை கழட்டிய அந்த யானை அங்கிருந்து வெளியேறி இருந்தால், மற்றவர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்ற காரணத்தினால் யானையை எச்சரிக்கும், வகையில் தாக்கியதாக அவர்கள் இருவரும் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தாக கூறப்படுகிறது.
யானைகளை கொடுமைப்படுத்துதல் குற்றம் என்ற சட்டப் பிரிவின் கீழ் வனத்துறையினர், இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.