பொள்ளாச்சி: அ.தி.மு.க. ஆட்சியில் எந்த ஆபத்தும் இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
பொள்ளாச்சி: அ.தி.மு.க. ஆட்சியில் எந்த ஆபத்தும் இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையொட்டி பொள்ளாச்சியில் அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் 36 வார்டுகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
தி.மு.க.விடம் இருந்துதான் தமிழக பெண்களை பாதுகாக்க வேண்டுமே தவிர, தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் எந்த ஆபத்தும் இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு நல்ல அபிமானம் உள்ளது. கடந்ததி.மு.க. ஆட்சியில் நில அபகரிப்பு மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்த கட்சி தி.மு.க. என்ற அதிருப்தி மக்களிடையே உள்ளது.
தி.மு.க. என்றாலே மக்கள் பயந்து ஓடுகிறார்கள். குறிப்பாக சிறு மற்றும் பெரும் தொழிலதிபர்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் அபகரித்து விடுவார்கள் என்று அச்சப்படுகிறார்கள் . ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி வழங்கி வருகிறார். மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் மு.க.ஸ்டாலின் குற்ற ஆராய்ச்சி நிபுணராகஎப்போதும் அரசு மீது குற்றச்சாட்டுக்களை சொல்லி வருவதால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

முதல்வர் செயல்படுத்தும் நல்ல திட்டங்களை எல்லாம் அவர் சொல்லித்தான் செய்கிறார் என்று முந்திரிக்கொட்டை போன்று சொல்வதைப் பார்த்து அவருக்கு மனநோய் ஏற்பட்டு விட்டதோ என்று மக்கள் நினைக்கிறார்கள். இதனால் அவர் மீது மக்கள் நெருப்பாகி விட்டார்கள். இவர் சொல்லி நிறைவேற்ற வேண்டிய நிலையில் முதல்வர் இல்லை.
எடப்பாடி பழனிசாமி யாருடையபதவியையும் பறித்துக் கொண்டு வரவில்லை. ஆனால் மு.க.ஸ்டாலின் கருணாநிதி மகன் என்ற தகுதியில்தான் தமிழகத்தில் அரசியல் செய்கிறார். 2021 தேர்தலுக்குப் பிறகு தொண்டர்கள் உழைப்பால் சேர்த்த சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய ஒன்றுதான் அவருடைய வேலையாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.