திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டபஞ்சாயத்து, நில அபகரிப்புகள் அதிகரிக்கும் - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
பொள்ளாச்சி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையொட்டி, பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் 36 வார்டுகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று மக்களுக்கு நலதிட்டங்கள் வழங்கிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பின்னர், செய்தியாளர்களுக்குஅளித்த பேட்டியின்போது, திமுகவிடம் இருந்து தான் தமிழக பெண்களை பாதுகாக்க வேண்டுமே தவிர, தமிழக மக்களுக்கு அதிமுக ஆட்சியில் எந்த ஆபத்தும் இல்லை, என்றார்.
அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு நல்ல அபிமானம் உள்ளது. கடந்ததிமுக ஆட்சியில், நில அபகரிப்பு மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்த கட்சி திமுக என்ற அதிருப்தி மக்களிடையே உள்ளது. திமுக என்றாலே மக்கள் பயந்து ஓடுகிறார்கள். குறிப்பாக சிறு மற்றும் பெரும் தொழிலதிபர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் அபகரித்து விடுவார்கள் என்றுஅச்சப்படுகிறார்கள், என்று குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 4 ஆண்டுகளாக எடப்பாடியார் நல்லாட்சி வழங்கி வருகிறார். மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் மு க ஸ்டாலின் குற்ற ஆராய்ச்சி நிபுணராகஎப்போதும் அரசு மீது குற்றச்சாட்டுக்களை சொல்லி வருவதால் மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். முதல்வர் செயல்படுத்தும்நல்லதிட்டங்களை எல்லாம் அவர் சொல்லி தான் செய்கிறார் என்று முந்திரிக் கொட்டையாக சொல்வதைப் பார்த்து அவருக்கு மனநோய் ஏற்பட்டு விட்டதோ, என்று மக்கள் நினைக்கிறார்கள்.
இது போன்ற செயல்பாடுகளால், ஸ்டாலின் மீது மக்கள் வெறுப்படைந்து விட்டார்கள். இவர் சொல்லி நிறைவேற்ற வேண்டிய நிலையில் முதல்வர் இல்லை. எடப்பாடியார் யாருடையபதவியைப் பறித்துக் கொண்டுவரவில்லை. ஆனால், முக ஸ்டாலின் கருணாநிதி மகன் என்ற தகுதியில் தான் தமிழகத்தில் அரசியல் செய்கிறார். 2021 தேர்தலுக்கு பிறகு தொண்டர்கள் உழைப்பால் சேர்த்த சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய ஒன்றுதான் அவருடையவேலையாக இருக்கும், பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
இதன்படி பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் 36 வார்டுகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று மக்களுக்கு நலதிட்டங்கள் வழங்கிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பின்னர், செய்தியாளர்களுக்குஅளித்த பேட்டியின்போது, திமுகவிடம் இருந்து தான் தமிழக பெண்களை பாதுகாக்க வேண்டுமே தவிர, தமிழக மக்களுக்கு அதிமுக ஆட்சியில் எந்த ஆபத்தும் இல்லை, என்றார்.
அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு நல்ல அபிமானம் உள்ளது. கடந்ததிமுக ஆட்சியில், நில அபகரிப்பு மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்த கட்சி திமுக என்ற அதிருப்தி மக்களிடையே உள்ளது. திமுக என்றாலே மக்கள் பயந்து ஓடுகிறார்கள். குறிப்பாக சிறு மற்றும் பெரும் தொழிலதிபர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் அபகரித்து விடுவார்கள் என்றுஅச்சப்படுகிறார்கள், என்று குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 4 ஆண்டுகளாக எடப்பாடியார் நல்லாட்சி வழங்கி வருகிறார். மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் மு க ஸ்டாலின் குற்ற ஆராய்ச்சி நிபுணராகஎப்போதும் அரசு மீது குற்றச்சாட்டுக்களை சொல்லி வருவதால் மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். முதல்வர் செயல்படுத்தும்நல்லதிட்டங்களை எல்லாம் அவர் சொல்லி தான் செய்கிறார் என்று முந்திரிக் கொட்டையாக சொல்வதைப் பார்த்து அவருக்கு மனநோய் ஏற்பட்டு விட்டதோ, என்று மக்கள் நினைக்கிறார்கள்.
இது போன்ற செயல்பாடுகளால், ஸ்டாலின் மீது மக்கள் வெறுப்படைந்து விட்டார்கள். இவர் சொல்லி நிறைவேற்ற வேண்டிய நிலையில் முதல்வர் இல்லை. எடப்பாடியார் யாருடையபதவியைப் பறித்துக் கொண்டுவரவில்லை. ஆனால், முக ஸ்டாலின் கருணாநிதி மகன் என்ற தகுதியில் தான் தமிழகத்தில் அரசியல் செய்கிறார். 2021 தேர்தலுக்கு பிறகு தொண்டர்கள் உழைப்பால் சேர்த்த சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய ஒன்றுதான் அவருடையவேலையாக இருக்கும், பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.