கோவை: காங்கயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் திமுக இரண்டு அணிகளாகச் செயல்படுவதாக வெளியான செய்திக்கு திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
கோவை: காங்கயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் திமுக இரண்டு அணிகளாகச் செயல்படுவதாக வெளியான செய்திக்கு திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
வரும் சட்டமன்ற தேர்தலில் கழக ஆட்சி அமைய வேண்டும், மக்களுக்கு விடியல் தர வேண்டும் என்ற நோக்கில் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு வியூகங்களின் வழியே மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தலைவர் அவர்கள் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்", "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற உத்திகளில் பெருவாரியான மக்களைச் சந்தித்து வருகிறார்.
மேலும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கழக மகளிரணி செயலாளர் கனிமொழி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் என அனைவரும் மக்களிடையே சென்று அதிமுகவின் மக்கள் விரோத போக்கை எடுத்துக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய பத்திரிக்கை செய்தி ஒன்றில் காங்கயத்தில் திமுக இரண்டு அணியாகச் செயல்படுவதாகவும் காங்கயம் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளர் போட்டி நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கயம் தொகுதியில் கழகத்தின் செயல்பாடுகளில் எவ்வித கோஷ்டி பூசலும் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்தே கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் கழகத் தலைவர் அவர்கள் அறிவிக்கும் வேட்பாளரை முழுமனதுடன் ஏற்று அவரை வெற்றி பெறச் செய்வது ஒன்றே கழக நிர்வாகிகளின் நோக்கமாக இருக்கிறது.
மேலும், தொகுதியில் நலத்திட்டப் பணிகள் அனைத்தும், அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் பணியாற்றி வருகிறோம்.
எனவே, காங்கயம் தொகுதியில் உட்கட்சி பிரச்சினை ஏதுமில்லாத சூழலில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இது போன்ற அவதூறு செய்திகளை சில பத்திரிக்கைகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
திமுக பிரச்சாரத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பும் ஆதரவும் ஆளுங்கட்சியைக் கலக்கமடையச் செய்துள்ளது. கழகத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாத அதிமுக அரசால் பரப்பப்படும் விஷம பிரச்சாரங்களில் ஒன்றாகவே நாங்கள் இதைப் பார்க்கிறோம்.
ஆக, பத்திரிகைகள் குறிப்பிடுவது போல திமுக-வில் காங்கயம் தொகுதியில் போட்டியிட எந்தவித சிக்கலும் இல்லை, தொகுதி நிர்வாகிகள், உடன்பிறப்புகள் மற்றும் மக்களிடையே எந்த பிரிவினையும் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்து அடிமை அதிமுக ஆட்சியை அகற்றுவதில் உறுதியோடு ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அந்த பத்திரிக்கை செய்தியை முற்றிலுமாக மறுக்கிறோம்.
மேலும், தலைவர் அவர்களை முதல்வராக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்." இவ்வாறு அந்த மறுப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
வரும் சட்டமன்ற தேர்தலில் கழக ஆட்சி அமைய வேண்டும், மக்களுக்கு விடியல் தர வேண்டும் என்ற நோக்கில் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு வியூகங்களின் வழியே மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தலைவர் அவர்கள் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்", "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற உத்திகளில் பெருவாரியான மக்களைச் சந்தித்து வருகிறார்.
மேலும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கழக மகளிரணி செயலாளர் கனிமொழி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் என அனைவரும் மக்களிடையே சென்று அதிமுகவின் மக்கள் விரோத போக்கை எடுத்துக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய பத்திரிக்கை செய்தி ஒன்றில் காங்கயத்தில் திமுக இரண்டு அணியாகச் செயல்படுவதாகவும் காங்கயம் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளர் போட்டி நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கயம் தொகுதியில் கழகத்தின் செயல்பாடுகளில் எவ்வித கோஷ்டி பூசலும் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்தே கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் கழகத் தலைவர் அவர்கள் அறிவிக்கும் வேட்பாளரை முழுமனதுடன் ஏற்று அவரை வெற்றி பெறச் செய்வது ஒன்றே கழக நிர்வாகிகளின் நோக்கமாக இருக்கிறது.
மேலும், தொகுதியில் நலத்திட்டப் பணிகள் அனைத்தும், அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் பணியாற்றி வருகிறோம்.
எனவே, காங்கயம் தொகுதியில் உட்கட்சி பிரச்சினை ஏதுமில்லாத சூழலில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இது போன்ற அவதூறு செய்திகளை சில பத்திரிக்கைகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
திமுக பிரச்சாரத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பும் ஆதரவும் ஆளுங்கட்சியைக் கலக்கமடையச் செய்துள்ளது. கழகத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாத அதிமுக அரசால் பரப்பப்படும் விஷம பிரச்சாரங்களில் ஒன்றாகவே நாங்கள் இதைப் பார்க்கிறோம்.
ஆக, பத்திரிகைகள் குறிப்பிடுவது போல திமுக-வில் காங்கயம் தொகுதியில் போட்டியிட எந்தவித சிக்கலும் இல்லை, தொகுதி நிர்வாகிகள், உடன்பிறப்புகள் மற்றும் மக்களிடையே எந்த பிரிவினையும் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்து அடிமை அதிமுக ஆட்சியை அகற்றுவதில் உறுதியோடு ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அந்த பத்திரிக்கை செய்தியை முற்றிலுமாக மறுக்கிறோம்.
மேலும், தலைவர் அவர்களை முதல்வராக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்." இவ்வாறு அந்த மறுப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.