கோவை: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இந்து முன்னணி செயலாளர் ஜெய்சங்கர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
கோவை: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இந்து முன்னணி செயலாளர் ஜெய்சங்கர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
கோவை மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பிற மதத்தினர் குறித்து அவதுாறாக பேசியதாக அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து சிங்காநல்லுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தைத் துாண்டும் வகையில் பேசியதாக இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டார். ஜே.எம்-3 கோர்ட்டில் தாக்கல் செய்த அவரது ஜாமீன் மனு, டிஸ்மிஸ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் அவர் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
கோவை மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பிற மதத்தினர் குறித்து அவதுாறாக பேசியதாக அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து சிங்காநல்லுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தைத் துாண்டும் வகையில் பேசியதாக இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டார். ஜே.எம்-3 கோர்ட்டில் தாக்கல் செய்த அவரது ஜாமீன் மனு, டிஸ்மிஸ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் அவர் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.