கோவை: கரியாம்பாளையம் ஊராட்சி செயலாளர் கடந்த 6 வருடங்களில் 89 லட்சம் சொத்து சேர்த்தது கண்டறியப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரை மாவட்ட கலெக்டர் ராஜாமணி சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தார்.
கோவை: கரியாம்பாளையம் ஊராட்சி செயலாளர் கடந்த 6 வருடங்களில் 89 லட்சம் சொத்து சேர்த்தது கண்டறியப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரை மாவட்ட கலெக்டர் ராஜாமணி சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தார்.
அன்னுார் ஊராட்சி ஒன்றியம் குன்னத்துார் ஊராட்சி செயலாளராக 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர் கார்த்திகேயன் (வயது 40). இவர், தற்போது கரியாம்பாளையம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதிகளவு சொத்து சேர்த்ததாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
கோவை கலெக்டர் ராஜாமணி பிறப்பித்துள்ள உத்தரவில், 'கார்த்திகேயன், 2013 ஏப்ரல் முதல் 2019 டிசம்பர் வரை வருமானத்துக்கு பொருந்தாத வகையில், 89 லட்ச ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. எனவே, சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்' என தெரிவித்துள்ளார்.
அன்னுார் ஊராட்சி ஒன்றியம் குன்னத்துார் ஊராட்சி செயலாளராக 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர் கார்த்திகேயன் (வயது 40). இவர், தற்போது கரியாம்பாளையம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதிகளவு சொத்து சேர்த்ததாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
கோவை கலெக்டர் ராஜாமணி பிறப்பித்துள்ள உத்தரவில், 'கார்த்திகேயன், 2013 ஏப்ரல் முதல் 2019 டிசம்பர் வரை வருமானத்துக்கு பொருந்தாத வகையில், 89 லட்ச ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. எனவே, சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்' என தெரிவித்துள்ளார்.