கோவை பகுதியில் மின்சாரம் திருடியவர்களுக்கு ரூ.2.78 லட்சம் அபராதம்!

கோவை: மின்வாரிய அமலாக்கத்துறையின் கோவை கோட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தபோது மின்சாரத்தைத் திருடி பயன்படுத்திய நபர்களை கண்டுபிடித்ததுடன் அவர்களுக்கு ரூ.2.78 லட்சம் அபராதம் விதித்தனர்.



கோவை: மின்வாரிய அமலாக்கத்துறையின் கோவை கோட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தபோது மின்சாரத்தைத் திருடி பயன்படுத்திய நபர்களை கண்டுபிடித்ததுடன் அவர்களுக்கு ரூ.2.78 லட்சம் அபராதம் விதித்தனர்.

மின்வாரிய அமலாக்கத்துறையின் கோவை கோட்ட அதிகாரிகள் கோவை வடக்கு வட்டத்துக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், சின்னவேடம்பட்டி, கீரணத்தம், கோவில்பாளையம், சரவணம்பட்டி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, மூன்று இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட நபர்களுக்கு ரூ.2.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க வலியுறுத்தி சமரசத் தொகையாக ரூ.52 ஆயிரம் செலுத்தினர்.

இதையடுத்து அவர்கள் மீது, போலீசாரிடம் புகார் எதுவும் தரப்படவில்லை. இந்நிலையில், மின் திருட்டு குறித்த புகார்களை 94430 49456 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என கோவை மின்பகிர்மான வட்ட (வடக்கு) மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) கீதா தெரிவித்துள்ளார்.

eob>

source: SimpliCity News Team

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...