கோவை: கோரிக்கைகள் நிறைவேறும்வரை பணிகளில் ஈடுபடமாட்டோம் என்று வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.
கோவை: கோரிக்கைகள் நிறைவேறும்வரை பணிகளில் ஈடுபடமாட்டோம் என்று வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைசேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது அவர்கள், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை வழங்கக் கோரியும், அனைத்து வருவாய்த்துறை ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கக் கோரியும், மாவட்டங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர் பணியிடங்களை நிரப்பக் கோரி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருவாய்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று தெரிவித்தனர்.
வரும் சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் பணிகளை தாங்கள் புறக்கணிப்பதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வருவாய் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடப்போவதில்லை என்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் த.சண்முகராஜ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.