வால்பாறை: சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க வால்பாறையில் படகு இல்லம் அமைக்கப்படுகிறது. விரைவில் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வால்பாறை: சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க வால்பாறையில் படகு இல்லம் அமைக்கப்படுகிறது. விரைவில் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலாப் பிரதேசமாக உள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமன்றி அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
வால்பாறையின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் வால்பாறையில் படகு இல்லம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு முயற்சியில் வால்பாறை ஸ்டான்மோர் சாலையில் நகராட்சி சார்பில் படகு இல்லம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கரைகளை அழகுபடுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. ஈச்ச மரங்களும் நடப்பட்டுள்ளன.

பெரும்பாலான பணிகள் முடிவுற்ற நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த மாத இறுதிக்குள் படகு இல்லம் திறக்க இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தகவல் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலாப் பிரதேசமாக உள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமன்றி அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
வால்பாறையின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் வால்பாறையில் படகு இல்லம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு முயற்சியில் வால்பாறை ஸ்டான்மோர் சாலையில் நகராட்சி சார்பில் படகு இல்லம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கரைகளை அழகுபடுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. ஈச்ச மரங்களும் நடப்பட்டுள்ளன.
பெரும்பாலான பணிகள் முடிவுற்ற நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த மாத இறுதிக்குள் படகு இல்லம் திறக்க இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தகவல் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.