`தென்னை நகரம்' பொள்ளாச்சி தனி மாவட்டமாகும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி!

கோவை: தென்னை நகரமான பொள்ளாச்சி தனி மாவட்டமாகும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். மக்கள் கோரிக்கைகளுக்கு இணங்க முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று அவர் கூறினார்.


கோவை: தென்னை நகரமான பொள்ளாச்சி தனி மாவட்டமாகும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். மக்கள் கோரிக்கைகளுக்கு இணங்க முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று அவர் கூறினார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் நேற்று பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். அப்போது அங்கிருந்த மக்கள் பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் வேலுமணி, இதை முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று உடனடியாக பொள்ளாச்சி மாவட்டமாக அறிவிக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து கூட்டத்திலிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கோஷங்களை எழுப்பி நன்றி தெரிவித்தனர்.

இதேபோல் பொள்ளாச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், 'பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு வேளாண் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை' என்றார்.

அவரைத்தொடர்ந்து அமைச்சர் வேலுமணி பேசும்போது, 'விவசாயிகளுக்காக மும்முனை மின்சாரம், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி உள்ளார். விவசாயிகள், பொதுமக்களுக்காக, 'தென்னை நகரம்' என அழைக்கப்படும் பொள்ளாச்சியை மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று கண்டிப்பாக நிறைவேற்ற உறுதுணையாக இருப்போம்' என்றார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...