கோவை: ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு மூலம் அரசுக்கு ரூ.7.69 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ் குமார் படேல் என்பவரை கோவை ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை: ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு மூலம் அரசுக்கு ரூ.7.69 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ் குமார் படேல் என்பவரை கோவை ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித்துறையினர் கைது செய்துள்ளனர்.
ரமேஷ் குமார் படேல் என்பவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மரக்கட்டைகள் விற்பனை நிறுவனங்கள் நடத்தி வருகிறார். மொத்தம் 5 நிறுவனங்களை நடத்திவரும் இவர் போலியாக இன்வாய்ஸ், இ-வே பில் ஆகிய ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்ததாக போலி கணக்கு காட்டியிருக்கிறார். இதற்கு அரசு அளிக்கும் வரிச்சலுகை (input credit) பெற்றிருக்கிறார். அந்தவகையில் ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு செய்ததன்மூலம் அரசுக்கு ரூ.7.69 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்மீது செய்யப்பட்ட புகாரின்பேரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து ரூ.7.69 கோடி வரி ஏய்ப்பு செய்த அந்த தொழிலதிபரிடமிருந்து 1.16 கோடி ரூபாய் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.2 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் உள்ள நிலையில், ரூ.5 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பது பிணையில் வர முடியாத குற்றமாகும்.
ரமேஷ் குமார் படேல் என்பவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மரக்கட்டைகள் விற்பனை நிறுவனங்கள் நடத்தி வருகிறார். மொத்தம் 5 நிறுவனங்களை நடத்திவரும் இவர் போலியாக இன்வாய்ஸ், இ-வே பில் ஆகிய ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்ததாக போலி கணக்கு காட்டியிருக்கிறார். இதற்கு அரசு அளிக்கும் வரிச்சலுகை (input credit) பெற்றிருக்கிறார். அந்தவகையில் ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு செய்ததன்மூலம் அரசுக்கு ரூ.7.69 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்மீது செய்யப்பட்ட புகாரின்பேரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து ரூ.7.69 கோடி வரி ஏய்ப்பு செய்த அந்த தொழிலதிபரிடமிருந்து 1.16 கோடி ரூபாய் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.2 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் உள்ள நிலையில், ரூ.5 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பது பிணையில் வர முடியாத குற்றமாகும்.