கோவையில் வங்கி அதிகாரி தொல்லையால் எலக்ட்ரீசியன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை!

கோவை: கோவை அருகே வங்கி அதிகாரிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் எலெக்ட்ரிசியன் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அருகே வங்கி அதிகாரிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் எலெக்ட்ரிசியன் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் தீனம் பாளையத்தில் உள்ளது ஜிம்சன் நகர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (29), இவருக்கு கோகிலா 24 என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ஆனந்தன் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கியில் வீடு கட்ட கடன் வாங்கினார். அவரால் கடனை சரியாக திருப்பி செலுத்த முடியவில்லை. தொடர்ந்து கடனை திருப்பி செலுத்தக் கூறி வங்கி அதிகாரிகள் அவரை தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே, தற்கொலைக்கு முன் அவர் போலீசாருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். வங்கி கடனை திருப்பி செலுத்தக் கூறிய அதிகாரிகள், எனக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்தன. அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

அந்த கடிதத்தில் எனது சாவுக்கு வங்கி அதிகாரிகள் நெருக்கடி காரணம். நான் இறந்த பின்னர் வங்கியில் உள்ள வீட்டு பத்திரங்களைப் பெற்று எனது தாயிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படிக்கு தங்களை மட்டுமே நம்பி விடைபெறுகிறேன் என எழுதியுள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...