கோவையில் கல்லூரி மாணவி, தனியார் நிறுவன பெண் ஊழியர் உள்பட 6 பெண்கள் மாயம்!

கோவை: கோவையில் நேற்று ஒரே நாளில் திருமணமான குடும்பப் பெண்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய பெண்கள், கல்லூரி மாணவி உள்பட ஆறு பெண்கள் மாயமானார்கள். இந்தச் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவையில் நேற்று ஒரே நாளில் திருமணமான குடும்பப் பெண்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய பெண்கள், கல்லூரி மாணவி உள்பட ஆறு பெண்கள் மாயமானார்கள். இந்தச் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையைச் சேர்ந்த வடிவேல் மனைவி கிரிஜா (வயது 28). இவர்களுக்கு வர்ஷினி என்ற மகள் உள்ளார். நேற்று கணவருடன் கோபித்துக்கொண்டு கிரிஜா மாயமானார். இதைக் கண்டு வடிவேல் அதிர்ச்சி அடைந்தார். அன்னூரைச் சேர்ந்த பெத்தையான் மகள் மைதிலி (வயது 19). துணிக்கடையில் வேலை பார்க்கும் இவர் வேலை முடிந்ததும் நேற்று மாலை வீடு திரும்பவில்லை.

சேலம் ஆத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி கவுசல்யா (வயது 19). அவர் சூலூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து கௌசல்யாவை போலீசார் தேடி வருகின்றனர். சூலூர் கலங்கல் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் துர்காதேவி (வயது 16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். திடீரென மாயமான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆனைமலையைச் சேர்ந்த முத்துசாமி மகள் கவுசல்யா (வயது 23). வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர். சிறுமுகையைச் சேர்ந்த நல்லசிவம் மகள் கௌதமி (வயது 21). தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வரும் இவர் போட்டோ ஸ்டுடியோவுக்கு சென்று வருவதாகக் கூறினார். அதன்பிறகு அவரைக் காணவில்லை.இது குறித்து அந்தந்த காவல் நிலையங்களில் அவர்களது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

காணாமல் போன 6 பெண்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாளில் 6 பெண்கள் மாயமான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...