கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நாளை தொடங்கி 3 நாட்கள் மு.க.ஸ்டாலின் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நாளை தொடங்கி 3 நாட்கள் மு.க.ஸ்டாலின் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார். இதுவரை மூன்று கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ள ஸ்டாலின் நேற்று மதுரை ஒத்தக்கடை பகுதியில் இருந்து நான்காவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். அதன்படி நாளை கோவை சிங்காநல்லூரில் `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
மாநகர் கிழக்கு மற்றும் மாநகர் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள், சிறு குறு தொழில் முனைவோர், இளைஞர்கள், மகளிர் என பலர் கலந்து கொள்கின்றனர். அவரிடமிருந்து மு.க.ஸ்டாலின் நேரில் மனுக்களை பெற்றுக்கொள்கிறார். பின்னர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து மதியம் ஒரு மணி அளவில் நீலகிரி மாவட்ட தி.மு.க. மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேட்டுப்பாளையம் காரமடையில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெறுகிறார். முதல் நாள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளும் ஸ்டாலின் அன்றிரவு ஓட்டலில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
இரண்டாவது நாளான 20-ஆம் தேதி கோவை கிழக்கு மற்றும் கோவை தெற்கு மாவட்டம் சார்பில் பொள்ளாச்சி ஆட்சி பெட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே மனுக்களை பெறுகிறார். தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தாராபுரம் பஸ் நிலையம் எதிரே நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார்.
3-வது நாளான 21-ஆம் தேதி காலை 8 மணிக்கு திருப்பூர் காங்கேயம் ரோடு ராக்கிபாளையம் பிரிவில் நடக்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் மனுக்களைப் பெறுகிறார். மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவை திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார். இதுவரை மூன்று கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ள ஸ்டாலின் நேற்று மதுரை ஒத்தக்கடை பகுதியில் இருந்து நான்காவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். அதன்படி நாளை கோவை சிங்காநல்லூரில் `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
மாநகர் கிழக்கு மற்றும் மாநகர் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள், சிறு குறு தொழில் முனைவோர், இளைஞர்கள், மகளிர் என பலர் கலந்து கொள்கின்றனர். அவரிடமிருந்து மு.க.ஸ்டாலின் நேரில் மனுக்களை பெற்றுக்கொள்கிறார். பின்னர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து மதியம் ஒரு மணி அளவில் நீலகிரி மாவட்ட தி.மு.க. மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேட்டுப்பாளையம் காரமடையில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெறுகிறார். முதல் நாள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளும் ஸ்டாலின் அன்றிரவு ஓட்டலில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
இரண்டாவது நாளான 20-ஆம் தேதி கோவை கிழக்கு மற்றும் கோவை தெற்கு மாவட்டம் சார்பில் பொள்ளாச்சி ஆட்சி பெட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே மனுக்களை பெறுகிறார். தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தாராபுரம் பஸ் நிலையம் எதிரே நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார்.
3-வது நாளான 21-ஆம் தேதி காலை 8 மணிக்கு திருப்பூர் காங்கேயம் ரோடு ராக்கிபாளையம் பிரிவில் நடக்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் மனுக்களைப் பெறுகிறார். மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவை திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.