கோவை: கடந்த 10 ஆண்டுகளாக தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவான குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கையை விட இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அதிகமான அளவு குடும்ப வன்முறைகள் பதிவாகியுள்ளன, என்று கோவையில் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவி கதீஜா காஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை: கடந்த 10 ஆண்டுகளாக தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவான குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கையை விட இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அதிகமான அளவு குடும்ப வன்முறைகள் பதிவாகியுள்ளன, என்று கோவையில் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவி கதீஜா காஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளது. குடும்ப உறவுகள் மற்றும் குடும்ப கட்டமைப்பை பற்றிய சரியான அறிவையும், புரிதலையும் ஏற்படுத்துவதன் மூலமும், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் கடமை மற்றும் உரிமைகளை உணர வைப்பதன் மூலமும், இறை உணர்வை போதிப்பதன் வழியாகவும், சமூகத்தில் நேர்மறையான சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் உருவாக்க முடியும். இதன் மூலம் வலிமையான ஆக்கப்பூர்வமான சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும், என்றார்.
"வலிமையான குடும்பம் வலுவான சமூகம்"
இதை உணர்த்தும் வகையில், ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் வரும் 19 முதல் 28ம் தேதி வரை "வலிமையான குடும்பம் வலுவான சமூகம்" என்ற மையகருத்தில் தேசிய அளவில் பரப்புரை இயக்கம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு அரங்க கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு இச்செய்தி சென்றடைய முடிவு செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது கோவை மாநகரம் மகளிரணி தலைவி ஜஹீனா அஹமத், நிர்வாகிகள் பர்ஜானா, சலீனா பஹி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து அவர் பேசுகையில், கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளது. குடும்ப உறவுகள் மற்றும் குடும்ப கட்டமைப்பை பற்றிய சரியான அறிவையும், புரிதலையும் ஏற்படுத்துவதன் மூலமும், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் கடமை மற்றும் உரிமைகளை உணர வைப்பதன் மூலமும், இறை உணர்வை போதிப்பதன் வழியாகவும், சமூகத்தில் நேர்மறையான சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் உருவாக்க முடியும். இதன் மூலம் வலிமையான ஆக்கப்பூர்வமான சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும், என்றார்.
"வலிமையான குடும்பம் வலுவான சமூகம்"
இதை உணர்த்தும் வகையில், ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் வரும் 19 முதல் 28ம் தேதி வரை "வலிமையான குடும்பம் வலுவான சமூகம்" என்ற மையகருத்தில் தேசிய அளவில் பரப்புரை இயக்கம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு அரங்க கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு இச்செய்தி சென்றடைய முடிவு செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது கோவை மாநகரம் மகளிரணி தலைவி ஜஹீனா அஹமத், நிர்வாகிகள் பர்ஜானா, சலீனா பஹி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.