500 காளைகள் களமிறங்கும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு: கோவை வெள்ளலூரில் 21-ந்தேதி நடக்கிறது!

கோவை: வரும் 21-ஆம் தேதி கோவை வெள்ளலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 12 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்குமளவுக்கு பிரம்மாண்ட பார்வையாளர் அரங்கு அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: வரும் 21-ஆம் தேதி கோவை வெள்ளலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 12 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்குமளவுக்கு பிரம்மாண்ட பார்வையாளர் அரங்கு அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை வெள்ளலூரை அடுத்த கஞ்சிக்கோணாம்பாளையம் பிரிவிலிருந்து சிறிது தொலைவில் உள்ளது எல் அண்ட் டி பை-பாஸ் சாலை. இங்கு வரும் 21-ந்தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. கோவை மாவட்ட நிர்வாகத்துடன், கோவை ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. பணிகளை ஜல்லிக்கட்டு சங்க தலைவர் அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டனர். தற்போது சுமார் 10 முதல் 12 ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் காலரிகள் அமைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. இம்முறை மூன்றடுக்குகளுடன் ரெடிமேடு முறையில் வாடிவாசல் அமைக்கப்படுகிறது.

வி.ஐ.பி. காலரி, போலீசார், மருத்துவக் குழுவினருக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இம்முறை 400 முதல் 500 காளைகள் மட்டுமே களமிறங்கும் என கூறப்படுகிறது. இதில், 300 காளைகள் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவையாகும். வழக்கம்போல வீரர்களுக்கு, தங்கக் காசு பரிசாக வழங்கப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...