பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து சாவு: கோவையில் பரிதாபம்!

கோவை: கோவை வடவள்ளி அருகே தனியார் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த 9 -ஆம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை வடவள்ளி அருகே தனியார் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த 9 -ஆம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை வேடப்பட்டி குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மருதாச்சலம். கால் டாக்ஸி ஓட்டுநரான இவரது மூத்த மகள் பூமா (வயது 14). இவர் வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

வழக்கம்போல் பள்ளி சென்ற மாணவி பூமா, நேற்று மதியம் விளையாட்டு நேரத்தில் பள்ளி வளாகத்தில் இருந்த மைதானத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது மாணவி பூமா திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடன் விளையாடிக் கொண்டிருந்த சக மாணவிகள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதுதொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில் மாணவிக்கு இதயக் கோளாறு இருந்ததும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சக தோழிகளுடன் விளையாடிய சிறுமி மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...