சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருவதாக உளதுறை செயலாளர் எஸ்கே பிரபாகர் அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருவதாக உளதுறை செயலாளர் எஸ்கே பிரபாகர் அறிவித்துள்ளார்.
அதன்படி, கோவை மேற்கு மண்டல ஐ.ஜியாக தினகரன் ஐபிஎஸ் மற்றும் கோவை துணை ஆணையராக மயில்வாகனன் பொறுப்பேற்க உள்ளனர். டி.சி.மயில்வாகனன் கோவை துணை ஆணையராக நியமனம்.
கோவை தலைமையிட துணை ஆணையர் குணசேகரன் சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ராணிப்பேட்டை எஸ்.பி மயில்வாகனன் கோவை தலைமையிட துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்கவுள்ள அ. மயில்வாகனன், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது திருச்சி மாவட்ட துணை ஆணையராக இருந்தார். அப்போது, திருச்சி ஜல்லிக்கட்டு போராட்டத்தை அவர் கையாண்ட விதம், மக்களிடையே குறிப்பாக மாணவர்களிடையே அவருக்கு நற்பெயற்றை பெற்று தந்தது.

அதற்கு சான்றாக, அதே ஆண்டு சுதந்திர தின விழாவில், தன்னலம் கருதாமல் சிறப்பாகச் செயல்பட்டு, சீரிய பணியாற்றியதற்காக சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் மயில்வாகனனுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
