தமிழக சட்டசபை தேர்தலையொட்டி போலீஸ் ஐ.ஜி பெரியய்யா உட்பட 54 போலீஸ் அதிகாரிகள் மாற்றம். புதிய ஐ.ஜியாக தினகரன் ஐபிஎஸ் நியமனம்.
கோவை: வருகிற சட்டமன்ற தேர்தலை ஒட்டி 54 உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று மொத்தம் 54 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். இதில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜியாக தினகரன் ஐபிஎஸ் மற்றும் கோவை துணை ஆணையராக மயில்வாகனன் பொறுப்பேற்க உள்ளனர்.
இது தொடர்பாக நேற்று இரவு அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது - ஆர். தினகரன், சென்னை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்த இவர், மேற்கு மண்டல ஐ.ஜியாக மாற்றப்பட்டார். கே. பெரியய்யா மேற்கு மண்டல ஐ.ஜி பணியில் இருந்த இவர், சென்னை பொதுப்பிரிவு ஐ.ஜி யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை
குணசேகரன், கோவை நகர தலைமையக துணை கமிஷனராக இருந்த இவர் அமலாக்கப்பிரிவு சேலம் மண்டல சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.மேலும்,கோவை துணை ஆணையராக அ. மயில்வாகனன், நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம்.
பாண்டியராஜன் சென்னை வணிக குற்றப்புலனாய்வு பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றி இவர் நீலகிரி மாவட்ட சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். சசிமோகன் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி இவர் சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற நியமனங்கள்
கணேசமூர்த்தி பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றிய இவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். தீபக் தாமோதர் நெல்லை போலீஸ் கமிஷனராக இருந்த இவர் சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி யாகநியமிக்கப்பட்டுள்ளார். கே. சங்கர் சி.பி.சி.ஐ.டி இவர் வடக்கு மண்டல ஐ.ஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அருண் சென்னை மண்டல சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றிய இவர் நிர்வாகப் பிரிவு ஐ.ஜியாக மாற்றப்பட்டார். வி பாலகிருஷ்ணன் சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு பிரிவு இணை கமிஷனர் ஆன இவர் சென்னை கிழக்கு சட்ட ஒழுங்கு பிரிவு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.