பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்து உள்பட 3 அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு காவல் நீட்டிப்பு: நீதிபதி உத்தரவு!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்து உள்பட 3 அ.தி.மு.க. பிரமுகர்களின் காவலை வரும் 3-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்,


கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்து உள்பட 3 அ.தி.மு.க. பிரமுகர்களின் காவலை வரும் 3-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக முதல் கட்ட விசாரணையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து மகளிர் சங்கங்கள், எதிர்க் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் தொடர்ந்து உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் எனவும் இதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒரு குற்றவாளிகூட தப்பிவிடக்கூடாது என்றுகூறி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக சி.பி.ஐ. நடத்திய தொடர் விசாரணையில் பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் அ.தி.மு.க. பிரமுகர்கள் ஹாரன் பால், பைக் பாபு, அருளானந்து உளபட 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்து. அதன்படி அவர்கள் கைது செய்யப்பட்டு கோபிசெட்டிப்பாளையம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் 3 பேருக்கும் இன்று நீதிமன்ற காவல் முடிவடைந்ததையொட்டி வீடியோ கான்பரன்சிங் மூலம் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி வழக்கை விசாரணை செய்து வரும் (மார்ச்) 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...