புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு ஏற்கெனவே வழங்கிய அரசாணையை நடைமுறைப்படுத்துங்கள்: கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன் சமூக நீதி கட்சி மகளிர் ஆர்ப்பாட்டம்!

கோவை: புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு ஏற்கெனவே வழங்கிய அரசாணையை நடைமுறைப்படுத்தக்கோரி கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன் சமூக நீதி கட்சி மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு ஏற்கெனவே வழங்கிய அரசாணையை நடைமுறைப்படுத்தக்கோரி கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன் சமூக நீதி கட்சி மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை உக்கடம் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மாநகரிலேயே குடியமர்த்த வேண்டும், அருந்ததியர் மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும், புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சமூக நீதி கட்சியின் மகளிர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டம் குறித்து சமூக நீதிக் கட்சித் தலைவர் ந.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, கோவை பகுதியில் உள்ள இடங்கள் பெருவாரியாக தனியார் மற்றும் அரசு அதிகாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள 23,500 கோடி ரூபாய் நிதி முறையாக மக்களை வந்தடையவில்லை என்றும் கூறினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்ட ஒதுக்கப்பட்ட 1,500 கோடி ரூபாய் என்ன ஆயிற்று என்று கேள்வி விடுத்தார்.



மேலும், கோவை மாநகரத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 25 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து தூய்மைப் பணிக்காக வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களது நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மாநகரிலேயே அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று கூறினார்.



கடந்த 2006-ஆம் ஆண்டு ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பட்டா வழங்க அரசாணை பிறப்பித்தார். ஆனால் இதுநாள் வரை அந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...