தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட் குறித்து பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சியில் கேரள மாநில மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை

தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட் குறித்து பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சியில் கேரள மாநில மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை.



தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட் குறித்து பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சியில் கேரள மாநில மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை.

பொள்ளாச்சி அருகே உள்ளஅங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் காணாமல் போனதாக, அவரது தந்தை அர்ஜுனன் ஆழியார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

விசாரணையில், காணாமல் போனதாக சொல்லப்பட்ட சந்தோஷ், மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து, கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பதுங்கி உள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்த சந்தோஷ் மீது, கேரள மாநிலம் வயநாடு பகுதியில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இது தொடர்பாக, கேரள மாநில மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் சந்தோஷ் தொடர்பான வழக்குகள் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள சந்தோஷின் வீட்டில் அவரது தந்தை அர்ஜுனன் மற்றும் அவரது தாய் கலைச்செல்வி ஆகியோரிடம் நேற்று நான்கு பேர் கொண்ட கேரளா மாவோயிஸ்ட் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சந்தோசை போலீசிடம் சரணடைய சொல்லுமாறும், சரணடைந்தால், அவரின் வழக்குக்கு ஏற்படும் செலவுகளை அரசு ஏற்றுக்கொண்டு, அரசு சார்பில் உதவி தொகை வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, சந்தோஷின் நண்பரிடமும் கேரள போலீசார் தொலைபேசி வாயிலாக விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...