கோவை குளத்தில் முகம் பிளாஸ்டிக் பை மூடப்பட்ட நிலையில் வாலிபர் பிணம்: எல்லைப் பிரச்சினையால் போலீஸ் குழப்பம்!

கோவை: கோவை குளத்தில் முகம் பிளாஸ்டிக் பை மூடப்பட்ட நிலையில் வாலிபர் பிணமாகக் கிடந்தார். அவர் இறந்து கிடந்த இடம் மூன்று காவல்நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் குழப்பம் நீடிக்கிறது.



கோவை: கோவை குளத்தில் முகம் பிளாஸ்டிக் பை மூடப்பட்ட நிலையில் வாலிபர் பிணமாகக் கிடந்தார். அவர் இறந்து கிடந்த இடம் மூன்று காவல்நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் குழப்பம் நீடிக்கிறது.



கோவை வீரகேரளம் பகுதியில் நாகராஜபுரம் குளம் உள்ளது. இன்று காலை அந்தக் குளத்தின் வழியாகச் சென்றவர்கள் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரது பிணம் முகத்தில் பாலித்தீன் கவரால் மூடப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற இடம் ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, செல்வபுரம் என மூன்று போலீஸ் ஸ்டேஷன் எல்லையை ஒட்டியுள்ள பகுதியாகும். குளத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் வருவதால் யார் பிணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்துவது என குழப்பம் எழுந்தது. இதனால் விசாரணை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே பிணம் மீட்கப்பட்டு குளத்தின் கரையில் வைக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடம் எந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் வருகிறது என முடிவு செய்ய கிராம நிர்வாக அலுவலர் அழைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் போலீஸ் ஸ்டேஷன் எல்லையை அறிவித்த பின்னர்தான் விசாரணை துவங்குவார்கள் என்று தெரிகிறது.

பிணமாகக் கிடந்த வாலிபர் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து குளத்தில் வீசி சென்றார்களா? என்பது தெரியவில்லை. போலீசாரின் எல்லைக் குழப்பத்தால் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் துவக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவியது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...