கோவை: 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இதேபோல் மாணவி குளித்ததை வீடியோ எடுத்தவரும் கைதானார். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்தது.
கோவை: 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இதேபோல் மாணவி குளித்ததை வீடியோ எடுத்தவரும் கைதானார். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்தது.
கோவை கருமத்தம்பட்டியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறினார்.
மாணவியின் பெற்றோர் விசாரித்தபோது கடந்த அக்டோபர் மாதம் தான் தனியாக வீட்டில் இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான மோகன் என்பவர் குடிபோதையில் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினார். வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியதால் யாரிடமும் சொல்லவில்லை என்றாள்.
இதைக் கேட்டதும் பதறிப்போன பெற்றோர் சம்பவம் குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்தநாயகி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மோகனை கைது செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 38). சாக்கு வியாபாரியான இவர் அதே பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் குளித்ததை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தீவிர விசாரணை நடத்தி செல்போனில் வீடியோ எடுத்த ஜெயச்சந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை கருமத்தம்பட்டியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறினார்.
மாணவியின் பெற்றோர் விசாரித்தபோது கடந்த அக்டோபர் மாதம் தான் தனியாக வீட்டில் இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான மோகன் என்பவர் குடிபோதையில் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினார். வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியதால் யாரிடமும் சொல்லவில்லை என்றாள்.
இதைக் கேட்டதும் பதறிப்போன பெற்றோர் சம்பவம் குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்தநாயகி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மோகனை கைது செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 38). சாக்கு வியாபாரியான இவர் அதே பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் குளித்ததை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தீவிர விசாரணை நடத்தி செல்போனில் வீடியோ எடுத்த ஜெயச்சந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.