திருப்பூர்: கோவை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் வேன் மீது பைக் மோதியதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்து காட்சிகள் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.
திருப்பூர்: கோவை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் வேன் மீது பைக் மோதியதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்து காட்சிகள் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் மயில்ரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரும் இவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த ராஜூ, நிஷாந்த் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கோவை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்கோயில் அருகே சென்றபோது அவர்களது இருசக்கர வாகனத்துக்கு முன் கோவை மாவட்டம் சூலூர் நோக்கி வேன் ஒன்று சென்றது. அப்பகுதியில் சாலையோரத்தில் இருந்த எரிவாயு நிரப்பும் மையத்துக்குச் செல்ல திடீரென வேன் திரும்பியது. அப்போது பின்னால் வேகமாகச் சென்ற மகேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் சென்ற இருசக்கர வாகனம் வேன்மீது மோதியது.

இருசக்கர வாகனம் மோதிய வேகத்தில் வேன் கவிழ்ந்தது.

விபத்தில் தூக்கி வீசப்பட்ட மகேந்திரன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜூ, நிஷாந்த் மற்றும் வேனில் வந்த 2 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வெள்ளக்கோயில் போலீசார் ராஜூ, நிஷாந்த் இருவரையும் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மகேந்திரனின் உடல் மீட்கப்பட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்து ஏற்பட்டபோது அருகில் இருந்த கட்டடத்தில் உள்ள சி.சி.டி.வியில் இருசக்கர வாகனம் வேகமாக வந்து ஆம்னி வேனின் மீது மோதியது மற்றும் மூன்று பேரும் தூக்கி வீசப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் மயில்ரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரும் இவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த ராஜூ, நிஷாந்த் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கோவை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்கோயில் அருகே சென்றபோது அவர்களது இருசக்கர வாகனத்துக்கு முன் கோவை மாவட்டம் சூலூர் நோக்கி வேன் ஒன்று சென்றது. அப்பகுதியில் சாலையோரத்தில் இருந்த எரிவாயு நிரப்பும் மையத்துக்குச் செல்ல திடீரென வேன் திரும்பியது. அப்போது பின்னால் வேகமாகச் சென்ற மகேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் சென்ற இருசக்கர வாகனம் வேன்மீது மோதியது.
இருசக்கர வாகனம் மோதிய வேகத்தில் வேன் கவிழ்ந்தது.
விபத்தில் தூக்கி வீசப்பட்ட மகேந்திரன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜூ, நிஷாந்த் மற்றும் வேனில் வந்த 2 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வெள்ளக்கோயில் போலீசார் ராஜூ, நிஷாந்த் இருவரையும் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மகேந்திரனின் உடல் மீட்கப்பட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்து ஏற்பட்டபோது அருகில் இருந்த கட்டடத்தில் உள்ள சி.சி.டி.வியில் இருசக்கர வாகனம் வேகமாக வந்து ஆம்னி வேனின் மீது மோதியது மற்றும் மூன்று பேரும் தூக்கி வீசப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.