கோவை: கோவை போத்தனூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்கும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் தப்பின.
கோவை: கோவை போத்தனூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்கும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் தப்பின.
கோவை போத்தனூரில் சுந்தராபுரத்தை அடுத்த காந்தி நகர் பஸ் ஸ்டாப் அருகே, 'இண்டல் மணி, எனும் நகை கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவன கிளை செயல்படுகிறது, நேற்று காலை வேலைக்கு வந்த ஊழியர்கள், நிறுவனத்தின் ஷட்டர் சிறிது உயரமாக இருப்பதைக் கண்டனர். இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து, ஷட்டரைத் திறந்து உள்ளே சென்றனர். அங்கே நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கர்கள் உடைக்கப்படாமல் இருப்பது தெரிந்தது. சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நேற்று முன்தினம் நள்ளிரவில் இரண்டுபேர் ஷட்டரை திறந்து உள்ளே வருவதும், ஒரு நிமிடம் கழித்து வெளியே சென்றதும் தெரிந்தது.
இதுகுறித்து மேலாளர் கதிர்வேலிடம் விசாரித்தபோது, லாக்கரில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறு கிலோ தங்க நகைகள் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் இருப்பதும் தெரிய வந்தது. போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை போத்தனூரில் சுந்தராபுரத்தை அடுத்த காந்தி நகர் பஸ் ஸ்டாப் அருகே, 'இண்டல் மணி, எனும் நகை கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவன கிளை செயல்படுகிறது, நேற்று காலை வேலைக்கு வந்த ஊழியர்கள், நிறுவனத்தின் ஷட்டர் சிறிது உயரமாக இருப்பதைக் கண்டனர். இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து, ஷட்டரைத் திறந்து உள்ளே சென்றனர். அங்கே நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கர்கள் உடைக்கப்படாமல் இருப்பது தெரிந்தது. சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நேற்று முன்தினம் நள்ளிரவில் இரண்டுபேர் ஷட்டரை திறந்து உள்ளே வருவதும், ஒரு நிமிடம் கழித்து வெளியே சென்றதும் தெரிந்தது.
இதுகுறித்து மேலாளர் கதிர்வேலிடம் விசாரித்தபோது, லாக்கரில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறு கிலோ தங்க நகைகள் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் இருப்பதும் தெரிய வந்தது. போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.