கோவை: கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மக்களுக்கு 100 சதவீத ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 6 ஆயிரத்து 250 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.
கோவை: கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மக்களுக்கு 100 சதவீத ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 6 ஆயிரத்து 250 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.
கோவையில் '100 சதவீத ரேஷன் அட்டை இலக்கு' என்ற அடிப்படையில் கடந்த, அக்டோபர் மாதம் 23-ம் தேதி முதல் தொடர்ந்து விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. கோவையில் 1,098 ரேஷன் கடைகளில் 10,57,000 அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் புதிதாக 6,250 பேருக்கு ரேஷன் கார்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விண்ணப்பிப்பவர்களில் உரிய சான்றிதழ் இல்லாதவர்களின் விண்ணப்பம் மட்டுமே நிராகரிக்கப்படுகின்றன. மற்ற அனைத்து விண்ணப்பங்களுக்கும் உடனுக்குடன் ஒப்புதல் வழங்கி அச்சிட அனுப்பப்படுகிறது. கோவையில், ஜனவரி 16-ந்தேதிக்கு முன்பு வரை விண்ணப்பித்த அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 6,250 பேருக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
கோவையில் '100 சதவீத ரேஷன் அட்டை இலக்கு' என்ற அடிப்படையில் கடந்த, அக்டோபர் மாதம் 23-ம் தேதி முதல் தொடர்ந்து விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. கோவையில் 1,098 ரேஷன் கடைகளில் 10,57,000 அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் புதிதாக 6,250 பேருக்கு ரேஷன் கார்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விண்ணப்பிப்பவர்களில் உரிய சான்றிதழ் இல்லாதவர்களின் விண்ணப்பம் மட்டுமே நிராகரிக்கப்படுகின்றன. மற்ற அனைத்து விண்ணப்பங்களுக்கும் உடனுக்குடன் ஒப்புதல் வழங்கி அச்சிட அனுப்பப்படுகிறது. கோவையில், ஜனவரி 16-ந்தேதிக்கு முன்பு வரை விண்ணப்பித்த அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 6,250 பேருக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.