கோவை: கோவை அருகே, துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி பலியான வழக்கில் கைதான 5 பேருக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
கோவை: கோவை அருகே, துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி பலியான வழக்கில் கைதான 5 பேருக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
கோவை பேரூர் அருகேயுள்ள தீத்திபாளையம் மாதேஷ் கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 40). விவசாயியான இவர் கடந்த மாதம் 18-ம் தேதி தனது நண்பர்களுடன் அய்யாசாமி மலைப் பகுதியில் காட்டுப்பன்றி, முயல் வேட்டையாடச் சென்றார். அப்போது அவருடன் வந்த ஒருவர், நாட்டுத் துப்பாக்கியை லோடு செய்யும்போது, திடீரென அய்யாசாமிமீது தவறுதலாக குண்டு பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் ஐந்து பேரும் அய்யாசாமியின் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த பேரூர் போலீசார் விசாரித்ததில் தீத்திபாளையத்தைச் சேர்ந்த அய்யாசாமியின் நண்பர்களான ராமன், பட்டீஸ்வரன், ஆர்.ரங்கநாதன், கே.ரங்கநாதன், சின்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று அவர்களது ஜாமீன் மனு கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி 5 வேட்டைக் காரர்களின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கோவை பேரூர் அருகேயுள்ள தீத்திபாளையம் மாதேஷ் கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 40). விவசாயியான இவர் கடந்த மாதம் 18-ம் தேதி தனது நண்பர்களுடன் அய்யாசாமி மலைப் பகுதியில் காட்டுப்பன்றி, முயல் வேட்டையாடச் சென்றார். அப்போது அவருடன் வந்த ஒருவர், நாட்டுத் துப்பாக்கியை லோடு செய்யும்போது, திடீரென அய்யாசாமிமீது தவறுதலாக குண்டு பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் ஐந்து பேரும் அய்யாசாமியின் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த பேரூர் போலீசார் விசாரித்ததில் தீத்திபாளையத்தைச் சேர்ந்த அய்யாசாமியின் நண்பர்களான ராமன், பட்டீஸ்வரன், ஆர்.ரங்கநாதன், கே.ரங்கநாதன், சின்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று அவர்களது ஜாமீன் மனு கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி 5 வேட்டைக் காரர்களின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.