கோவை: சேலம் கருமத்தம்பட்டி அருகே இன்று அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கார் முழுமையாக எரிந்து நாசமடைந்த நிலையில் காரில் பயணம் செய்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவை: சேலம் கருமத்தம்பட்டி அருகே இன்று அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கார் முழுமையாக எரிந்து நாசமடைந்த நிலையில் காரில் பயணம் செய்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சேலம் - கொச்சின் நெடுஞ்சாலையில் கருமத்தம்பட்டி அருகே இன்று அதிகாலை 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் பின்புறத்தில் புகை வந்தது.

இதைத்தொடர்ந்து கார் முழுவதும் தீ பற்றியது. இதனால் காருக்குள் இருந்தவர்கள் அலறி அடித்தபடி காரிலிருந்து வெளியே குதித்து ஓடத் தொடங்கினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் உடனடியாக கருமத்தம்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் பயணம் செய்த ஐந்து பேரிடம் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் - கொச்சின் நெடுஞ்சாலையில் கருமத்தம்பட்டி அருகே இன்று அதிகாலை 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் பின்புறத்தில் புகை வந்தது.
இதைத்தொடர்ந்து கார் முழுவதும் தீ பற்றியது. இதனால் காருக்குள் இருந்தவர்கள் அலறி அடித்தபடி காரிலிருந்து வெளியே குதித்து ஓடத் தொடங்கினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் உடனடியாக கருமத்தம்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் பயணம் செய்த ஐந்து பேரிடம் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.