பழனி முருகன் கோயிலில் இரண்டாம் மின் இழுவை ரயில் சேவை நிறுத்தம்!

கோவை: பழனி முருகன் கோயிலில் இரண்டாம் எண் மின் இழுவை ரயில் பராமரிப்பு பணிக்காக இன்று முதல் 40 நாட்கள் நிறுத்தப்படுகிறது,



கோவை: பழனி முருகன் கோயிலில் இரண்டாம் எண் மின் இழுவை ரயில் பராமரிப்பு பணிக்காக இன்று முதல் 40 நாட்கள் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்திலிருந்து மலைக் கோயிலுக்கு செல்ல மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் உள்ளது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், படியேறிச் சென்று முருகனை தரிசிக்க முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு இந்த மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் மூலம் பயணம் செய்துவருகின்றனர். மின் இழுவை ரயில் நிலையத்தில் இருந்து மொத்தம் மூன்று மின் இழுவை ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் இரண்டாம் எண் மின் இழுவை ரயில் பராமரிப்பு பணிக்காக இன்று (திங்கட்கிழமை) முதல் 40 நாட்கள் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் இழுவை ரயில் பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு விரைவில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...