கோவை: இருளர் சமூக பழங்குடியின மக்களுக்கு கோவை டவுன் ரவுண்ட் டேபிள், பெண்கள் சர்க்கிள், கிரெடாய் அமைப்புகள் சார்பில் மின்வசதி செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: இருளர் சமூக பழங்குடியின மக்களுக்கு கோவை டவுன் ரவுண்ட் டேபிள், பெண்கள் சர்க்கிள், கிரெடாய் அமைப்புகள் சார்பில் மின்வசதி செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை அணைக்கட்டி வனப்பகுதியை அடுத்த தூமனூர் மற்றும் செம்புக்கரை உள்ளிட்ட வசிக்கும் இருளர் சமூக பழங்குடியின மக்களுக்கு மின்வசதி செய்துகொடுக்க கோவை டவுன் ரவுண்ட் டேபிள் 31, கோவை நகர பெண்கள் சர்க்கிள் 16 மற்றும் கிரெடாய் அமைப்பு ஆகியவை முடிவு செய்தன. மின்வசதி செய்து கொடுப்பதன்மூலம் இப்பகுதியைச் சேர்ந்த 53 வீடுகளைச் சேர்ந்த இருளர் இன மக்கள் பயன்பெறுவர்.

இந்த திட்டத்துக்கான தொடக்கவிழாவில் வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் கோவை டவுன் ரவுண்ட் டேபிள் 31, கோவை நகர பெண்கள் சர்க்கிள் 16 மற்றும் கிரெடாய் அமைப்பு நிர்வாகிகள் பிரதீப் ராஜப்பா, தயானந்த் பழனிசாமி, சி.ஆர். சிந்துஜா தயானந்த், சி.ஆர்.ரோகிணி கிறிஸ்டோபர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
21-ம் நூற்றாண்டிலும் மின்சாரம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நடத்துவது என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று. இந்தச் சூழலில் தங்கள் வீடுகளில் மின்வசதி பெற்று வெளிச்சத்தில் வாழப்போகும் அந்த நாட்களை இருளில் இருக்கும் இருளர் சமூக பழங்குடியின மக்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
கோவை அணைக்கட்டி வனப்பகுதியை அடுத்த தூமனூர் மற்றும் செம்புக்கரை உள்ளிட்ட வசிக்கும் இருளர் சமூக பழங்குடியின மக்களுக்கு மின்வசதி செய்துகொடுக்க கோவை டவுன் ரவுண்ட் டேபிள் 31, கோவை நகர பெண்கள் சர்க்கிள் 16 மற்றும் கிரெடாய் அமைப்பு ஆகியவை முடிவு செய்தன. மின்வசதி செய்து கொடுப்பதன்மூலம் இப்பகுதியைச் சேர்ந்த 53 வீடுகளைச் சேர்ந்த இருளர் இன மக்கள் பயன்பெறுவர்.
இந்த திட்டத்துக்கான தொடக்கவிழாவில் வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் கோவை டவுன் ரவுண்ட் டேபிள் 31, கோவை நகர பெண்கள் சர்க்கிள் 16 மற்றும் கிரெடாய் அமைப்பு நிர்வாகிகள் பிரதீப் ராஜப்பா, தயானந்த் பழனிசாமி, சி.ஆர். சிந்துஜா தயானந்த், சி.ஆர்.ரோகிணி கிறிஸ்டோபர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
21-ம் நூற்றாண்டிலும் மின்சாரம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நடத்துவது என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று. இந்தச் சூழலில் தங்கள் வீடுகளில் மின்வசதி பெற்று வெளிச்சத்தில் வாழப்போகும் அந்த நாட்களை இருளில் இருக்கும் இருளர் சமூக பழங்குடியின மக்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.