பொள்ளாச்சி: தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொள்ளாச்சி வருவதை முன்னிட்டு 15 ஏக்கரில் பிரம்மாண்ட அண்ணா அரங்கம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
பொள்ளாச்சி: தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொள்ளாச்சி வருவதை முன்னிட்டு 15 ஏக்கரில் பிரம்மாண்ட அண்ணா அரங்கம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' எனும் தலைப்பில் பொதுமக்களிடம் 100 நாட்களில் தீர்வு என்று மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்று வருகிறார். அதனடிப்படையில் கோவை கிழக்கு மற்றும் கோவை தெற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட பொள்ளாச்சி பகுதிக்கு வரும் 20-ந் தேதி வருகிறார்.

இதையொட்டி பொள்ளாச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் தி.மு.க வினர் 15 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்க, தமிழ் முறைப்படி கால்கோள் அமைக்கும் பணியை கோவை மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதுகுறித்து தென்றல் செல்வராஜ் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' எனும் தலைப்பில் பொதுமக்களிடம் மனு பெற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 20ஆம் தேதி பொள்ளாச்சிக்கு வந்து பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்கள் பெற ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும், பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையானஅடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.