கோவை: தேவர் சமுதாயத்தையும் டி.டி.வி. தினகரன் பற்றியும் தரக்குறைவாக பேசி வரும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணிடம் முக்குலத்தோர் வழக்கறிஞர் பிரிவினர் இன்று மனு கொடுத்தனர்.
கோவை: தேவர் சமுதாயத்தையும் டி.டி.வி. தினகரன் பற்றியும் தரக்குறைவாக பேசி வரும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணிடம் முக்குலத்தோர் வழக்கறிஞர் பிரிவினர் இன்று மனு கொடுத்தனர்.

கோவை கோபாலபுரம் பாலாஜி காம்ப்ளக்ஸ் பகுதியில் வசிப்பவர் வழக்கறிஞர் கார்த்திக். முக்குலத்தோர் சமுதாய வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த இவர் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 11-ஆம் தேதி சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டி.டி.வி.தினகரன் பார் வைத்து ஊத்திக் கொடுக்கும் தொழில் செய்கிறார் என்றூ கூறியதுடன் அவருடைய குலத் தொழிலையும் தனிநபர் தாக்குதல் தொடுத்துள்ளார். சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தேவர் சமுதாயத்தைப் பற்றியும் தரக்குறைவாக பேசியுள்ளார். தொடர்ந்து பல்வேறு செய்தியாளர்கள் சந்திப்பில் இதுபோன்ற கருத்துக்களை பேசிவரும் சட்ட அமைச்சர் மீது காவல்துறை ஆணையர் முறைப்படி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
கோவை கோபாலபுரம் பாலாஜி காம்ப்ளக்ஸ் பகுதியில் வசிப்பவர் வழக்கறிஞர் கார்த்திக். முக்குலத்தோர் சமுதாய வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த இவர் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 11-ஆம் தேதி சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டி.டி.வி.தினகரன் பார் வைத்து ஊத்திக் கொடுக்கும் தொழில் செய்கிறார் என்றூ கூறியதுடன் அவருடைய குலத் தொழிலையும் தனிநபர் தாக்குதல் தொடுத்துள்ளார். சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தேவர் சமுதாயத்தைப் பற்றியும் தரக்குறைவாக பேசியுள்ளார். தொடர்ந்து பல்வேறு செய்தியாளர்கள் சந்திப்பில் இதுபோன்ற கருத்துக்களை பேசிவரும் சட்ட அமைச்சர் மீது காவல்துறை ஆணையர் முறைப்படி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.