கோவை: லாபம் தரும் பணிகளை மட்டுமே செய்யும் வேலுமணி, மக்கள் பணிகளை செய்வதில்லை என்று தி.மு.க.நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. காட்டமாகக் கூறினார்.
கோவை: லாபம் தரும் பணிகளை மட்டுமே செய்யும் அமைச்சர் வேலுமணி, மக்கள் பணிகளை செய்வதில்லை, என்று தி.மு.க.நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாநகராட்சிப் பகுதியில் நடைபெறும் ஊழல் முறைகேட்டைக் கண்டித்து சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில், மாநகர் கிழக்கு மாவட்டம் பீளமேடு பகுதி தி.மு.க. சார்பில், இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, கோவை திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பீளமேடு பகுதி தி.மு.க. பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம், 38-வது வார்டு வட்ட தி.மு.க. செயலாளர்கள் மாடசாமி, பூவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பெண்கள் உள்பட 3000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், பாதாள சாக்கடைப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடி சாலைகள் அமைக்க வேண்டும், ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணிகளை முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாககளை ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், பேசிய நா.கார்த்திக் எம்.எல்.ஏ பேசியதாவது: "மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்தக்கூட காவல்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். கோவையில் நடைபெறும் அவலங்களை சட்டமன்றத்தில் பேசவும் அனுமதி மறுக்கின்றனர். மக்கள் மன்றத்தில் நேரடியாக விவாதிக்க தான் தயாராக இருக்கிறேன், நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?"

மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில், நன்றாக இருக்கும் பகுதிகளில் பணிகளைச் செய்வதாக முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். லாபம் தரும் பணிகளை மட்டும் செய்யும் அமைச்சர் வேலுமணி, மக்கள் பணிகளை செய்வதில்லை. இதனால், சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக கோவை மாறியுள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கொள்ளைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. அனைத்திலும் ஊழல் நிறைந்துவிட்டது, என்று நா கார்த்திக் எம் எல் ஏ கண்டனம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, 3 ஆயிரம் பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தி.மு.க. சொத்து பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.