கோவை: மிகவும் பிரபலமான நிறுவனங்களின் தொலைபேசி எண்களை போலியாக தயார் செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: மிகவும் பிரபலமான நிறுவனங்களின் தொலைபேசி எண்களை போலியாக தயார் செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரபல ஆன்லைன் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மைய தொலைபேசி எண்களை போலியாக உருவாக்கி, பணத்தை திருடுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:- பெரும்பாலும் குறிப்பிட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையங்களின், தொடர்பு எண்கள் தேடுதளங்கள் மூலம் தேடப்படுகிறது. பொருளை வாங்க ஆர்டர் கொடுத்து அதற்கான பணத்தை செலுத்திய பின் பல்வேறு காரணங்களால் பொருள் வாடிக்கையாளருக்கு வழங்கப்படாதபோது அவர் புகார் தெரிவிக்க அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்கிறார்.
மோசடிப் பேர்வழிகள் இத்தகைய வாடிக்கையாளர்களை கணக்கில் கொண்டு தேடுதளங்களில், பிரபல நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய தொடர்பு எண்களை போலியாக பதிவு செய்கின்றனர். இதை உண்மையென நம்பி அழைக்கும் வாடிக்கையாளர்களின் பணம் பறிக்கப்படுகிறது. சமீபகாலமாக, இத்தகைய புகார்கள் அதிகரித்துள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
பிரபல ஆன்லைன் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மைய தொலைபேசி எண்களை போலியாக உருவாக்கி, பணத்தை திருடுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:- பெரும்பாலும் குறிப்பிட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையங்களின், தொடர்பு எண்கள் தேடுதளங்கள் மூலம் தேடப்படுகிறது. பொருளை வாங்க ஆர்டர் கொடுத்து அதற்கான பணத்தை செலுத்திய பின் பல்வேறு காரணங்களால் பொருள் வாடிக்கையாளருக்கு வழங்கப்படாதபோது அவர் புகார் தெரிவிக்க அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்கிறார்.
மோசடிப் பேர்வழிகள் இத்தகைய வாடிக்கையாளர்களை கணக்கில் கொண்டு தேடுதளங்களில், பிரபல நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய தொடர்பு எண்களை போலியாக பதிவு செய்கின்றனர். இதை உண்மையென நம்பி அழைக்கும் வாடிக்கையாளர்களின் பணம் பறிக்கப்படுகிறது. சமீபகாலமாக, இத்தகைய புகார்கள் அதிகரித்துள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.