கோவை: கோவையில் பிஸ்கட்டுக்கு கூடுதல் பணம் வசூலித்ததாக தொடர்ந்த வழக்கில் போலியான ஆதாரங்களை கொடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் பிஸ்கட்டுக்கு கூடுதல் பணம் வசூலித்ததாக தொடர்ந்த வழக்கில் போலியான ஆதாரங்களை கொடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் பி.எம்.சாமி காலனியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர், 2016-ம் ஆண்டு வடவள்ளி பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பிஸ்கட் பாக்கெட் ஒன்றை வாங்கினார். பிஸ்கட்டின் அதிகபட்ச விலையை விட, கூடுதலாக பணம் வசூலித்ததாக வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்த, வழக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், வழக்கிற்குத் தேவையான ஆதாரங்களை, ஜெயராமன் நுகர்வோர் கோட்டில் தாக்கல் செய்தார். வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தவிர்த்து, தவறான ஆதாரங்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவுசெய்ய நுகர்வோர் நீதிமன்றம் போலீசாருக்கு அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் ஜெயராமன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பி.எம்.சாமி காலனியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர், 2016-ம் ஆண்டு வடவள்ளி பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பிஸ்கட் பாக்கெட் ஒன்றை வாங்கினார். பிஸ்கட்டின் அதிகபட்ச விலையை விட, கூடுதலாக பணம் வசூலித்ததாக வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்த, வழக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், வழக்கிற்குத் தேவையான ஆதாரங்களை, ஜெயராமன் நுகர்வோர் கோட்டில் தாக்கல் செய்தார். வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தவிர்த்து, தவறான ஆதாரங்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவுசெய்ய நுகர்வோர் நீதிமன்றம் போலீசாருக்கு அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் ஜெயராமன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.