கோவை தனியார் மருத்துவக்கல்லூரி மேலாளரை தாக்கிய 2 பேருக்கு சிறை: போலி ஆவணம் தயாரித்து கல்லூரியை விற்க முயன்ற ஆசாமிகள்!

கோவை: கோவை தனியார் மருத்துவக்கல்லூரி மேலாளரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் போலி ஆவணம் தயாரித்து கல்லூரியை விற்க முயன்றவர்கள் என்பது தெரியவந்தது.


கோவை: கோவை தனியார் மருத்துவக்கல்லூரி மேலாளரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் போலி ஆவணம் தயாரித்து கல்லூரியை விற்க முயன்றவர்கள் என்பது தெரியவந்தது.

கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியை விற்பதாகக் கூறி சிலர், மோசடியில் ஈடுபடுவதாக மேலாளர் சிவகுமார் செட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில், நேற்று மதியம் அங்கு வந்த மோசடி நபர்கள் 2 பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக சிவகுமாரிடம் கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்த ஆசாமிகளுக்கும், மேலாளர் சிவக்குமாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த மோசடி நபர்கள் சிவக்குமாரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த செட்டிபாளையம் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர்கள் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இரண்டுபேரும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூரைச் சேர்ந்த சங்கர் மற்றும் துடியலூர் அசோகபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பதும் தெரிய வந்தது.

இவர்கள் இருவரும் கல்லூரி இணையதளத்தில் உள்ள தகவல்களைச் சேகரித்து, அதனடிப்படையில், மோசடி முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...