அவதூறு பேச்சு: பா.ஜ.க பிரமுகர் கல்யாணராமன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது, கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை: கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சமீபத்தில், மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, கல்யாணராமன், இஸ்லாமிய இறைதூதர் முகமது நபி மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக மத பிரச்சனையை தூண்டும் விதமாக அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவருடைய ஜாமீன் மனு இரண்டாவது முறையாக கோவை கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி பரிந்துரையின்பேரில் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி கல்யாணராமன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதற்கான நகல் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கல்யாணராமனிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்தது குறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 31-01-2021 அன்று மாலை 5 மணி முதல் 6:20 மணி வரை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அபிராமி தியேட்டர் எதிரே உள்ள அன்னூர் சாலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுமார் 400 முதல் 500 பேர் கலந்துகொண்ட கட்சியின் நகர தலைவர் உமாசங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, சிறப்புரையாற்றிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இஸ்லாமிய இறைதூதர் முகமது நபி மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக மத பிரச்சனையை தூண்டும் விதமாக தரக்குறைவாக பேசியும் இழிவுபடுத்தியும் அக்கூட்டத்தில் கல், கத்தி, கட்டைகள் போன்ற ஆயுதங்களுடன் சட்ட விரோதமாக ஒன்று கூடி கோசங்கள் போட்டு பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டது, தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் நிலைய குற்ற எண் 109/2021 U/S 147,148,149,323,504,505(ii),153(A),153(B) & 269 IPC @ 147,148,149,324,353,506(ii),307 & 109 IPC இன் படி பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 01.02.2021 அன்று கல்யாணராமன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று 11.02.2021 ஆம் தேதி மேற்படி கல்யாணராமனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும்படியாக கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் Cr.M.P.No.01/G/2021/E1 படி பிறப்பித்த உத்தரவின் நகலை கல்யாணராமனுக்கு 11.02.2021 ஆம் தேதி மாலை 17.15 மணிக்கு ஈரோடு மாவட்ட சிறைச்சாலையில் வைத்து சார்பு செய்து TPDA No. 701/2021 இன் படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என கோவை மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக்நகொள்ளப்பட்டு அவரிடம் கொடுக்கப்பட்டது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...