கோவை: பீளமேடு பகுதியில் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கோவை: பீளமேடு பகுதியில் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளைஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சிங்கநல்லூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு, 26 ஆண்டுகளுக்கு ரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்துக்கு இந்த மக்கள் விரோத அரசு ஒப்பந்தம் வழங்கியிருக்கிறது. குடிமக்களுக்கு அரசு செய்து தர வேண்டிய அடிப்படை தேவைகளில் ஒன்று குடிநீர். அந்தக் குடிநீரை விநியோகிக்கும் வேலையைக்கூட செய்யமுடியாத கையாலாகாத அரசாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தமிழக உள்ளாட்சித் துறையும், முதல்வர் பழனிசாமி அரசும் மாறியிருக்கிறது.
ஆகவே, கோவை மாநகராட்சி சூயஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், 998 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்தும், பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தியும், பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில், பீளமேடு ரொட்டிக் கடை மைதானம் பகுதியில், கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் பீளமேடு பகுதி – 1 தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது'' இவ்வாறு அவர் கூறினார்.