கோவை ஈஷா யோகா மையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை!

கோவை: தேசிய பாதுகாப்பு படை சார்பில், பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்தது.



கோவை: தேசிய பாதுகாப்பு படை சார்பில், பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்தது.

தேசிய பாதுகாப்பு படை சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு, விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம். கோவை ஈஷா யோகா மையத்தில் இதுபோன்றதொரு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று இரவு 7.30 மணிக்கு துவங்கியது. 'அலர்ட்' தகவல் கிடைத்ததும், ஆலாந்துறை மற்றும் புறநகர் போலீசார் 20 பேர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த குழுவினர், ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி, ஒத்திகையில் ஈடுபட்டனர். மருத்துவக் குழு, வருவாய்த்துறையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அனைவரும் எவ்வளவு நேரத்தில் விரைவாக செயல்பட்டனர் என்பது கணக்கிடப்பட்டது.

தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 18 பேர் அடங்கிய குழுவினர், கடந்த வாரம் முதல் கோவையில் முகாமிட்டுள்ள நிலையில் நேற்று ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். சூலுார் விமானப்படை தளத்திலும், இதுபோன்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளனர். கடந்த, 2017-ம் ஆண்டு இதேபோன்ற ஒத்திகை நிகழ்ச்சியை கோவையில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கீரணத்தத்தில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் தேசிய பாதுகாப்பு படையினர் நிகழ்த்தினர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...