கோவை: கோவை பகுதியில் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபருக்கு சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது, கத்தியால் குத்திய இந்து முன்னணியினர் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை பகுதியில் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபருக்கு சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது, கத்தியால் குத்திய இந்து முன்னணியினர் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை உக்கடம் கோட்டைமேடு எஸ்.எஸ்.கோவில் வீதி எஸ்.டி.பி.ஐ. 82-வது கிளை தலைவராக இருப்பவர் முகமது முபாரக் மகன் அகில் அகமது (வயது 27). இவர் நேற்று ராமநாதபுரம் பகுதியில் தன்வந்திரி கோயில் அருகே தன்னுடைய தோழி சாருலதா என்ற பெண்ணுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சஞ்சய் என்கிற சச்சின் ஆகியோர் அகில் அகமதுவைப் பார்த்து `என்னடா லவ் ஜிகாத் செய்கிறாயா?' என்று கூறி தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தினர். இரும்புக் கம்பியால் தாக்கியபிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ரத்தக் காயத்துடன் அகில் அகமது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தகவல் அறிந்ததும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த இப்ராஹிம் மற்றும் அதன் உறுப்பினர்கள் அரசு மருத்துவமனையில் கூடினர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து குற்றவாளி கார்த்திக் மற்றும் சச்சினை தேடி வருகின்றனர். கார்த்திக் உள்ளூர் ரவுடி என்பதும் இவர்மீது ராமநாதபுரம் காவல்நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை உக்கடம் கோட்டைமேடு எஸ்.எஸ்.கோவில் வீதி எஸ்.டி.பி.ஐ. 82-வது கிளை தலைவராக இருப்பவர் முகமது முபாரக் மகன் அகில் அகமது (வயது 27). இவர் நேற்று ராமநாதபுரம் பகுதியில் தன்வந்திரி கோயில் அருகே தன்னுடைய தோழி சாருலதா என்ற பெண்ணுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சஞ்சய் என்கிற சச்சின் ஆகியோர் அகில் அகமதுவைப் பார்த்து `என்னடா லவ் ஜிகாத் செய்கிறாயா?' என்று கூறி தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தினர். இரும்புக் கம்பியால் தாக்கியபிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ரத்தக் காயத்துடன் அகில் அகமது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தகவல் அறிந்ததும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த இப்ராஹிம் மற்றும் அதன் உறுப்பினர்கள் அரசு மருத்துவமனையில் கூடினர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து குற்றவாளி கார்த்திக் மற்றும் சச்சினை தேடி வருகின்றனர். கார்த்திக் உள்ளூர் ரவுடி என்பதும் இவர்மீது ராமநாதபுரம் காவல்நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.