ஏழைகளின் வாழ்வாதாரம் உயர கடந்த பத்தாண்டில் பன்னிரண்டரை லட்சம் பேருக்கு வெள்ளாடுகள்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம்!

பொள்ளாச்சி: ஏழைகளின் வாழ்வாதாரம் உயர கடந்த பத்தாண்டில் பன்னிரண்டரை லட்சம் பேருக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.


பொள்ளாச்சி: ஏழைகளின் வாழ்வாதாரம் உயர கடந்த பத்தாண்டில் பன்னிரண்டரை லட்சம் பேருக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கொள்ளுப்பாளையம், நாட்டுக்கல்பாளையம், கொல்லபட்டி, சி.மலையாண்டிபட்டிணம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் மூன்றரை கோடி செலவில் 1,110 ஏழைக் குடும்பங்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. கொல்லப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.36 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கால்நடை பராமரிப்பத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு வெள்ளாடுகள் வழங்கியதுடன் நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் வெள்ளாடுகளை பராமரிப்புக்காக ரூ.2 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

`தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தாண்டு மட்டும் ஒன்றரை லட்சம் பேருக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் 12 லட்சத்து 75 ஆயிரம் வெள்ளாடுகள், ஒன்றரை லட்சம் பேருக்கு கறவை மாடுகள், மூன்றரை லட்சம் பேருக்கு நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பூர் மாவட்டத்தில் வரும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு தினங்கள் திருப்பூர், வடக்கு, தெற்கு, காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...