கோவை: ஆனைமலை, மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. இதற்காக சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து 80 அடி உயர மூங்கில் கொடிமரம் எடுத்து வரப்பட்டது.
கோவை: ஆனைமலை, மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. இதற்காக சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து 80 அடி உயர மூங்கில் கொடிமரம் எடுத்து வரப்பட்டது.
கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக இங்கு வந்துசெல்வார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசையன்று குண்டம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான குண்டம் விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதற்காக நேற்று சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து 80 அடி உயரமுள்ள மூங்கில் கொடிமரத்தை வெட்டி எடுத்துவர பக்தர்கள் சென்றனர்.

மூங்கில் கொடிமரத்தை வெட்டி எடுத்து வந்து சர்க்கார்பதி பகுதியில் உள்ள வனதேவதை கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

அதன்பிறகு பல கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கொடிமரத்தை தோளில் சுமந்துவந்து மாசாணியம்மன் கோயில் அருகே உள்ள உப்பாற்றில் குளிப்பாட்டி சந்தனம், மலர் மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து, கோயில் வளாகத்தில் வைத்தனர்.
இந்த கொடிமரம் நாளை காலை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து செல்லப்பட்டு கோயில் கோபுரம் முன்பு நிலை நிறுத்தப்படும். கொடிமரம் எடுத்து வரும் பணியில் ஆனைமலை முன்னாள் பேரூராட்சித்தலைவரும், மாசாணியம்மன் நற்பணி மன்றத் தலைவருமானசாந்தலிங்ககுமார், கோயில் தலைமை முறைதாரர் மனோகரன், அருளாளி அருண் உள்பட பலர் இருந்தனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து, வரும் 24-ம் தேதி புதன்கிழமை நள்ளிரவு மயானபூஜையும், 25-ம் தேதி சக்தி கும்பஸ்தாபனமும், மகாபூஜையும் நடைபெறவுள்ளது. 26-ம் தேதி இரவு குண்டம் பூ வளர்த்தலும், 27-ம் தேதி காலை 8.30 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெறவுள்ளது. 28-ம் தேதி கொடி இறக்குதல், மார்ச் 1-ம் தேதி அபிஷேக பூஜையுடன் குண்டம் விழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில்நிர்வாகத்தினர், கோயில் முறைதாரர்கள், விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.
கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக இங்கு வந்துசெல்வார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசையன்று குண்டம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான குண்டம் விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதற்காக நேற்று சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து 80 அடி உயரமுள்ள மூங்கில் கொடிமரத்தை வெட்டி எடுத்துவர பக்தர்கள் சென்றனர்.
மூங்கில் கொடிமரத்தை வெட்டி எடுத்து வந்து சர்க்கார்பதி பகுதியில் உள்ள வனதேவதை கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதன்பிறகு பல கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கொடிமரத்தை தோளில் சுமந்துவந்து மாசாணியம்மன் கோயில் அருகே உள்ள உப்பாற்றில் குளிப்பாட்டி சந்தனம், மலர் மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து, கோயில் வளாகத்தில் வைத்தனர்.
இந்த கொடிமரம் நாளை காலை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து செல்லப்பட்டு கோயில் கோபுரம் முன்பு நிலை நிறுத்தப்படும். கொடிமரம் எடுத்து வரும் பணியில் ஆனைமலை முன்னாள் பேரூராட்சித்தலைவரும், மாசாணியம்மன் நற்பணி மன்றத் தலைவருமானசாந்தலிங்ககுமார், கோயில் தலைமை முறைதாரர் மனோகரன், அருளாளி அருண் உள்பட பலர் இருந்தனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து, வரும் 24-ம் தேதி புதன்கிழமை நள்ளிரவு மயானபூஜையும், 25-ம் தேதி சக்தி கும்பஸ்தாபனமும், மகாபூஜையும் நடைபெறவுள்ளது. 26-ம் தேதி இரவு குண்டம் பூ வளர்த்தலும், 27-ம் தேதி காலை 8.30 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெறவுள்ளது. 28-ம் தேதி கொடி இறக்குதல், மார்ச் 1-ம் தேதி அபிஷேக பூஜையுடன் குண்டம் விழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில்நிர்வாகத்தினர், கோயில் முறைதாரர்கள், விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.