நீலகிரி: கொத்தடிமைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் மூன்றாண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீலகிரி: கொத்தடிமைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் மூன்றாண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கு. சதீஷ்குமார் தலைமை தாங்கினார். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வாகனத்தில் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் வைப்பதன் மூலமாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
கொத்தடிமை தொழிலாளர்முறை ஒழிப்பு சட்டம் (1976)16,17 மற்றும் 18-ன் படி கொத்தடிமைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூறப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின்கீழ் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதவி ஆணையர் சதீஷ்குமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் எச்.வசந்தா, பா.கிருஷ்ணவேணி, சி.ரகுராம், நவீன் கிருஷ்ணா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கு. சதீஷ்குமார் தலைமை தாங்கினார். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வாகனத்தில் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் வைப்பதன் மூலமாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
கொத்தடிமை தொழிலாளர்முறை ஒழிப்பு சட்டம் (1976)16,17 மற்றும் 18-ன் படி கொத்தடிமைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூறப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின்கீழ் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதவி ஆணையர் சதீஷ்குமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் எச்.வசந்தா, பா.கிருஷ்ணவேணி, சி.ரகுராம், நவீன் கிருஷ்ணா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.