கோவை: கோவையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு மேம்பாலங்கள் கட்டுவதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக திருடி விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் மேம்பாலப் பணிகள்நடைபெற்று வருகின்றன. அங்கு மேம்பாலங்கள் கட்டுவதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக திருடி விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் ராமநாதபுரம், திருச்சி சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான கம்பி மற்றும் கட்டுமானப் பொருட்களை அந்தந்த பகுதியில் வைத்துள்ளனர். இந்நிலையில் இரும்புக் கம்பி உள்ளிட்ட 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டுமானப் பொருட்கள் திருட்டு போனது. புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வந்தனர்.
விசாரணையில், கோட்டை புதுாரைச் சேர்ந்த கபார்கான், அப்துல்காதர், மைல்கல் பாரதி நகரைச் சேர்ந்த ஷாருக்கான், உக்கடத்தைச் சேர்ந்த பீர்முகமது, கோட்டை மேட்டைச் சேர்ந்த முகமது தாரிக், புல்லுக்காடு ஹவுசிங்யூனிட்டைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஆறு பேரையும் கைது செய்தனர். இதேபோல அவர்கள் மூன்று முறை திருடி, பழைய இரும்புக் கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. திருட்டுபோன கட்டுமானப் பொருட்களின் மொத்த மதிப்பு 7 லட்சம் ரூபாய் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கோவையில் ராமநாதபுரம், திருச்சி சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான கம்பி மற்றும் கட்டுமானப் பொருட்களை அந்தந்த பகுதியில் வைத்துள்ளனர். இந்நிலையில் இரும்புக் கம்பி உள்ளிட்ட 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டுமானப் பொருட்கள் திருட்டு போனது. புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வந்தனர்.
விசாரணையில், கோட்டை புதுாரைச் சேர்ந்த கபார்கான், அப்துல்காதர், மைல்கல் பாரதி நகரைச் சேர்ந்த ஷாருக்கான், உக்கடத்தைச் சேர்ந்த பீர்முகமது, கோட்டை மேட்டைச் சேர்ந்த முகமது தாரிக், புல்லுக்காடு ஹவுசிங்யூனிட்டைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஆறு பேரையும் கைது செய்தனர். இதேபோல அவர்கள் மூன்று முறை திருடி, பழைய இரும்புக் கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. திருட்டுபோன கட்டுமானப் பொருட்களின் மொத்த மதிப்பு 7 லட்சம் ரூபாய் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.