கோவை: ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளில் காருண்யா நகர் என உள்ள பெயரை நல்லூர் வயல் என மாற்றித் தரும்படி பழங்குடி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கோவை: ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளில் காருண்யா நகர் என உள்ள பெயரை நல்லூர் வயல் என மாற்றித் தரும்படி பழங்குடி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கோவை மத்வராயபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் கலெக்டரைச் சந்தித்து கொடுத்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம், மத்வராயபுரம் ஊராட்சி, நல்லுார் வயல் கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்துவருகிறோம். 1986-ம் ஆண்டு காருண்யா கல்லுாரி நல்லுார்வயலில் செயல்படதுவங்கியது. அப்போது அந்த இடம் மட்டும், காருண்யா நகர் என்ற ஒரு தெருவாக இருந்தது. தற்போதும், அரசு இதழ்களில் அவ்வாறே உள்ளது. ஆனால், காருண்யா நிர்வாகம் தனது அதிகார பலத்தால், சிறிது சிறிதாக எங்கள் ஊரின் அடையாளமான பாரம்பரிய பெயரை மாற்றத்துவங்கினர்.

1992ம் ஆண்டு மத்திய அரசின் கீழ் செயல்படும் தபால் நிலையம், காருண்யா நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நல்லுார்வயல் என்ற கிராமத்தின் பெயரையே காருண்யா நகர் என்று மாற்றினர். கிராம மக்களின் ஆதார், ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை அனைத்திலும் காருண்யா நகர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கி, அரசு போக்குவரத்து துறை அலுவலகம், பி.எஸ்.என்.எல்., போலீஸ் ஸ்டேஷன், தற்போது அமையவுள்ள மின்சார வாரியத்துக்கும் காருண்யா நகர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் எங்கள் கிராமத்தின் அடையாளத்தை இழந்துவிட்டோம். எனவே, பாரம்பரிய பெயரான நல்லுார்வயல் என்பதை அனைத்து இடங்களிலும் குறிப்பிடுவதுடன், அனைத்து அரசு அடையாளஅட்டைகளிலும் பெயர் மாற்றம் செய்து தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கோவை மத்வராயபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் கலெக்டரைச் சந்தித்து கொடுத்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம், மத்வராயபுரம் ஊராட்சி, நல்லுார் வயல் கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்துவருகிறோம். 1986-ம் ஆண்டு காருண்யா கல்லுாரி நல்லுார்வயலில் செயல்படதுவங்கியது. அப்போது அந்த இடம் மட்டும், காருண்யா நகர் என்ற ஒரு தெருவாக இருந்தது. தற்போதும், அரசு இதழ்களில் அவ்வாறே உள்ளது. ஆனால், காருண்யா நிர்வாகம் தனது அதிகார பலத்தால், சிறிது சிறிதாக எங்கள் ஊரின் அடையாளமான பாரம்பரிய பெயரை மாற்றத்துவங்கினர்.
1992ம் ஆண்டு மத்திய அரசின் கீழ் செயல்படும் தபால் நிலையம், காருண்யா நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நல்லுார்வயல் என்ற கிராமத்தின் பெயரையே காருண்யா நகர் என்று மாற்றினர். கிராம மக்களின் ஆதார், ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை அனைத்திலும் காருண்யா நகர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கி, அரசு போக்குவரத்து துறை அலுவலகம், பி.எஸ்.என்.எல்., போலீஸ் ஸ்டேஷன், தற்போது அமையவுள்ள மின்சார வாரியத்துக்கும் காருண்யா நகர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் எங்கள் கிராமத்தின் அடையாளத்தை இழந்துவிட்டோம். எனவே, பாரம்பரிய பெயரான நல்லுார்வயல் என்பதை அனைத்து இடங்களிலும் குறிப்பிடுவதுடன், அனைத்து அரசு அடையாளஅட்டைகளிலும் பெயர் மாற்றம் செய்து தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.