கோவை: கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சூரிய ஒளி, மின்சாரம் மற்றும் பெடலிங் முறையில் இயங்கும் 'த்ரீ இன் ஒன்' சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார்.
கோவை: கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சூரிய ஒளி, மின்சாரம் மற்றும் பெடலிங் முறையில் இயங்கும் 'த்ரீ இன் ஒன்' சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார்.
சைக்கிளை கண்டுபிடித்த மாணவர் பரத்குமார் 'சிம்பிளிசிட்டி'க்கு அளித்த சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது பெயர் பரத்குமார். கோவையில் உள்ள பி.எஸ்.ஜி, கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. எலெக்ட்ரானிக்ஸ் படித்து வருகிறேன். அப்பா மேஸ்திரி, அம்மா ஹவுஸ் வொய்ஃப், ஒரு சகோதரி உள்ளார்.
மக்களுக்கு பயனுள்ள புதுமையான தயாரிப்புகளைக் கண்டுபிடிப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. இப்போது நான் `த்ரீ இன் ஒன்' சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளேன், இந்த சைக்கிளை சூரிய ஒளி, பேட்டரி மற்றும் பெடலிங் என மூன்று வழிகளைப் பயன்படுத்தி இயக்க முடியும். தற்போது சந்தைகளில் ஒன்று அல்லது இரண்டு வகையான முறைகளைப் பயன்படுத்தி இயக்கப்படும் சைக்கிள்கள்மட்டுமே உள்ளன. எனவே மூன்று வழிகளிலும் இயங்கும் ஒரு புதுமையான தயாரிப்பைக் கண்டுபிடிக்க முடிவு செய்தேன். இதற்காகபழைய சைக்கிள் ஸ்கிராப்பை சேகரித்து அவற்றின்மூலம் இந்த சைக்கிளை தயாரித்தேன்.
இந்த சைக்கிளை சூரிய ஒளி, பேட்டரி அல்லது பெடலிங் முறையில் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் சைக்கிளை மிதித்து இயக்குவதன்மூலமும், சூரிய ஒளியைப் பயன்படுத்துவதன்மூலமும் பேட்டரி சார்ஜ் ஆகும். இப்படிப்பட்ட சைக்கிளை நான் எம்.எஸ்.எம்.இ-யில் பதிவு செய்துள்ளேன்.
என்னைப் பொறுத்தவரை இந்த `த்ரீ இன் ஒன்' சைக்கிளை மலிவு விலையில் வழங்குவதே எனது நோக்கமாகும். தற்போது காற்று மாசு மற்றும் ஒலி மாசுபாடு காரணமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த சைக்கிளைப் பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் நான் கண்டுபிடித்துள்ள எனது இந்த முயற்சிக்கு நிறுவனங்கள் ஆதரவளிக்க முன்வந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த `த்ரீ இன் ஒன்' சைக்கிள் விலை மிகவும் விலை குறைவாக இருக்கும், எனவே அனைத்து மக்களும் அதை வாங்க முடியும்." இவ்வாறு அவர் கூறினார்.
சைக்கிளை கண்டுபிடித்த மாணவர் பரத்குமார் 'சிம்பிளிசிட்டி'க்கு அளித்த சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது பெயர் பரத்குமார். கோவையில் உள்ள பி.எஸ்.ஜி, கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. எலெக்ட்ரானிக்ஸ் படித்து வருகிறேன். அப்பா மேஸ்திரி, அம்மா ஹவுஸ் வொய்ஃப், ஒரு சகோதரி உள்ளார்.
மக்களுக்கு பயனுள்ள புதுமையான தயாரிப்புகளைக் கண்டுபிடிப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. இப்போது நான் `த்ரீ இன் ஒன்' சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளேன், இந்த சைக்கிளை சூரிய ஒளி, பேட்டரி மற்றும் பெடலிங் என மூன்று வழிகளைப் பயன்படுத்தி இயக்க முடியும். தற்போது சந்தைகளில் ஒன்று அல்லது இரண்டு வகையான முறைகளைப் பயன்படுத்தி இயக்கப்படும் சைக்கிள்கள்மட்டுமே உள்ளன. எனவே மூன்று வழிகளிலும் இயங்கும் ஒரு புதுமையான தயாரிப்பைக் கண்டுபிடிக்க முடிவு செய்தேன். இதற்காகபழைய சைக்கிள் ஸ்கிராப்பை சேகரித்து அவற்றின்மூலம் இந்த சைக்கிளை தயாரித்தேன்.
இந்த சைக்கிளை சூரிய ஒளி, பேட்டரி அல்லது பெடலிங் முறையில் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் சைக்கிளை மிதித்து இயக்குவதன்மூலமும், சூரிய ஒளியைப் பயன்படுத்துவதன்மூலமும் பேட்டரி சார்ஜ் ஆகும். இப்படிப்பட்ட சைக்கிளை நான் எம்.எஸ்.எம்.இ-யில் பதிவு செய்துள்ளேன்.
என்னைப் பொறுத்தவரை இந்த `த்ரீ இன் ஒன்' சைக்கிளை மலிவு விலையில் வழங்குவதே எனது நோக்கமாகும். தற்போது காற்று மாசு மற்றும் ஒலி மாசுபாடு காரணமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த சைக்கிளைப் பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் நான் கண்டுபிடித்துள்ள எனது இந்த முயற்சிக்கு நிறுவனங்கள் ஆதரவளிக்க முன்வந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த `த்ரீ இன் ஒன்' சைக்கிள் விலை மிகவும் விலை குறைவாக இருக்கும், எனவே அனைத்து மக்களும் அதை வாங்க முடியும்." இவ்வாறு அவர் கூறினார்.