பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கட்டிட மேஸ்திரியின் வீட்டு பூட்டை உடைத்து 9 சவரன் நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கட்டிட மேஸ்திரியின் வீட்டு பூட்டை உடைத்து 9 சவரன் நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி செல்வகணபதி நகரைச் சேர்ந்தவர் கணேசன். கட்டட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன், திருநள்ளாறு கோயிலுக்கு சென்றார்.

இன்று வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 9 சவரன் நகை மற்றும் ரூ 5 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு கணேசன் தகவல் கொடுத்ததையடுத்தார். அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி செல்வகணபதி நகரைச் சேர்ந்தவர் கணேசன். கட்டட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன், திருநள்ளாறு கோயிலுக்கு சென்றார்.
இன்று வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 9 சவரன் நகை மற்றும் ரூ 5 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு கணேசன் தகவல் கொடுத்ததையடுத்தார். அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.